சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவர்களில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,362 பேர் உறவினர் வீடுகளிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மூன்று முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களு கங்கைப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடு ஓடை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து சிறு வெள்ள மட்டமாகவும் களுத்துறை மில்லகந்த பிரதேசம் வரை உயர் வெள்ள மட்டமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சீரற்ற காலநிலைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...