சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவர்களில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,362 பேர் உறவினர் வீடுகளிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மூன்று முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களு கங்கைப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடு ஓடை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து சிறு வெள்ள மட்டமாகவும் களுத்துறை மில்லகந்த பிரதேசம் வரை உயர் வெள்ள மட்டமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சீரற்ற காலநிலைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...