சீரற்ற காலநிலையால் 2,352 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 601 குடும்பங்களைச் சேர்ந்த 2,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவர்களில் 373 குடும்பங்களைச் சேர்ந்த 1,362 பேர் உறவினர் வீடுகளிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் மூன்று முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களு கங்கைப் பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடு ஓடை பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து சிறு வெள்ள மட்டமாகவும் களுத்துறை மில்லகந்த பிரதேசம் வரை உயர் வெள்ள மட்டமாகவும் உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சீரற்ற காலநிலைக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலவும் காலநிலை காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...