‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

Date:

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று நகரில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குட்படுத்திய இந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

அவர்களை நீதிக்கு முன்னே நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் உண்மையான மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கத்தான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் இங்கு ஒன்று திரண்டுக்கின்றது.

மேலும் அழகிய வளங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை இன்று மோசமாக நிலைமைக்கு தள்ளிய கள்வர் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யாமல் நேர்மையான அரசியல் தவைர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை சுயநல அரசியலையும் கோழைத்தனமான அரசியலையும் முடிவுக்குகொண்டு வர அனைவரும் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...