‘சுயநல அரசியலை முடிவுக்குகொண்டு வர வேண்டும்’:சிராஜ் மஷூர்

Date:

இன்றைய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தை பாதுகாக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மக்கள் அடிப்படை பிரச்சினைகளை வெளிக்கொணர்தற்காகவே இந்த போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றதாக சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சிராஜ் மஷூர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று நகரில் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வங்குரோத்தாக்கி மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குட்படுத்திய இந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

அவர்களை நீதிக்கு முன்னே நிறுத்த வேண்டும். இந்த நாட்டின் உண்மையான மக்கள் அபிலாஷைகளை வென்றெடுக்கத்தான் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் இங்கு ஒன்று திரண்டுக்கின்றது.

மேலும் அழகிய வளங்களைக் கொண்டுள்ள இந்நாட்டை இன்று மோசமாக நிலைமைக்கு தள்ளிய கள்வர் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தெரிவு செய்யாமல் நேர்மையான அரசியல் தவைர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதேவேளை சுயநல அரசியலையும் கோழைத்தனமான அரசியலையும் முடிவுக்குகொண்டு வர அனைவரும் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...