ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை பாராளுமன்றத்தில் தோல்வி!

Date:

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசர அவசரமாக விவாதம் செய்வதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக எடுத்துக்கொள்வதற்கான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்மொழிந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்பட்டது.

இந்த பிரேரணையை முன்வைக்கும் முயற்சியை எதிர்த்த சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரேரணையை முன்னெடுப்பதற்கு முன்னர் வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கம் 119 வாக்குகளையும், எதிர்க்கட்சி 68 வாக்குகளையும் பெற்றதால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்துடன் வாக்களித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...