டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்: எரிசக்தி அமைச்சர்

Date:

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின் உற்பத்திக்காக அதிகளவான டீசல் வெளியிடப்படுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் பழுதடைந்ததையடுத்து, மூன்று மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு அதிகளவு டீசல் மின்சார உற்பத்திக்காக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாக தினசரி 4,000 மெட்ரிக் தொன் டீசல் பெற்றோல்; நிரப்பு நிலையங்களுக்கு விநியோகப்படும் என்றும், போதுமான அளவு இருப்புக்கள் இருந்தும் தற்போது 1000 முதல் 1500 மெட்ரிக் தொன்கள் மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் அடுத்த மூன்று நாட்களுக்குள் குறையும் என்று கூறிய அமைச்சர்,
எரிபொருள் தாங்கிகளின் சமீபத்திய வேலைநிறுத்தம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக தற்போது பெற்றோலுக்காக வரிசை காணப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...