இலங்கை தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
அதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, 90 வீதமான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், எரிபொருள் நிரப்பும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்த சில்வா தெரிவித்தார்.