நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்: போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!

Date:

இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தற்போது இலங்கையில் டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது, இது பொது போக்குவரத்தின் செயல்பாடுகளை பாதித்துள்ளதுடன் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில, நாட்டிற்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுகிறது, ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1000- 1500 தொன் மட்டுமே வெளியிடப்படுகிறது, இது மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீட்டை வழங்கியதன் காரணமாகும்.

அடுத்த டீசல் ஏற்றுமதி மே மாதம் 11 ஆம் திகதி வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2 நாட்கள் தாமதமாகி வருவதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு இலங்கை முழுவதும் மே 6 நாளை பூரண ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி 6 ஆம் திகதி 1000 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டணி அறிவித்துள்ளது.

அதேபோல ரயில்வே தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளன.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...