நாட்டின் வருங்கால சந்ததியை பாதுகாக்க தவறிவிட்டோம்: சாணக்கியன்

Date:

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது பாத்திமா ஆயிஷாவுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் சிறுமியின் மரணம் தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் வருங்கால சந்ததியையும் பாதுகாக்க நாங்கள் தவறிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுமியின் மரணத்திற்காக காரணமானவர்களுக்கு உரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு சம்பந்தப்படவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இவ் அரசாங்கம் சிறிய மற்றும் அற்பமான தொகையே வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய சிறுவர்களே நாளைய எமது நாட்டின் எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...