பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு!

Date:

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

அதற்கமைய ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும், பாக்கிர் மாக்கர் 65 வாக்குகளும் செல்லுபடியாகாத வாக்கு 3 ஆகவும் பதியப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தமது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.

இதற்கமைய, இன்று நாடாளுமன்றில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவாகியுள்ளார்.

இதேவேளை பிரதி சபாநாயகர் தேர்தலை விரைவுபடுத்தும் வகையில் சட்டசபையில் கூடுதல் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதன்படி, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலவினால் பரிந்துரைக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவினால் ஆதரித்தார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயரை முன்மொழிந்தார், அதை லக்ஷ்மன் கிரியெல்ல உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆளும் கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க
து.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...