பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Date:

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர் வாக்களிப்பு ஆரம்பமாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (05) அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்ததோடு சுசில் பிரேமஜயந்த பிரேரணையை ஆதரித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவுக்கு ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவு இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமித்ததுடன், எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரேரணையை ஆதரித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...