பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Date:

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சிகளால் இம்தியாஸ் பக்கிர் மாக்கர் பரிந்துரைக்கப்பட்டார். மணி ஒலித்த ஐந்து நிமிடங்களின் பின்னர் வாக்களிப்பு ஆரம்பமாகும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (05) அறிவித்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை நிமல் சிறிபால டி சில்வா பரிந்துரைத்ததோடு சுசில் பிரேமஜயந்த பிரேரணையை ஆதரித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் வேட்புமனுவுக்கு ஆளும் கட்சிக்கு பூரண ஆதரவு இருப்பதாக பீரிஸ் தெரிவித்தார்.

ரஞ்சித் மத்துமபண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை நியமித்ததுடன், எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பிரேரணையை ஆதரித்தார்.

Popular

More like this
Related

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...