புதிய அரசாங்கத்தை அமைக்க தயார்: ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நிபந்தனைகள்!

Date:

புதிய அரசாங்கத்தை அமைக்க 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் கடினமான மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக உரிய விடயங்களுக்கு உட்பட்டு நாட்டைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முதலாவதாக, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்., இரண்டாவதாக, புதிய அரசாங்கத்தின் பணிகளில் ஜனாதிபதி தலையிடக் கூடாது, மூன்றாவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும், கடைசியாக, பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகு பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...