புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க: இன்று மாலை பதவியேற்பு!

Date:

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்போதே பிரதமர் பதவி தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதுடன், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் பதவிக்கு மூன்று பெயர்களை முன்மொழிவதற்கு அரசாங்கத்தின் சுயேச்சைக் குழுவொன்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரை அந்த பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...