புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான இந்திய உளவுத்துறை எச்சரிக்கையின் காரணமாக பேருந்துகளில் பயணப்பொதிகள் தடைசெய்யப்பட்டுள்ளன!- கெமுனு

Date:

பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை கடுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, பயணிகள் தங்கள் பைகளை ‘லக்கேஜ் ரேக்குகளில்’ வைப்பதை விட தங்களுடைய உடைமைகளில் பராமரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

‘எதிர்வரும் நாட்களில் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியது என்று அவர் கூறினார்.

பஸ்களில் சந்தேகப்படும்படியான பயணப்பொதிகள், மற்றும் நபர்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தினர்.

பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...