பேக்கரி வியாபாரம் முடங்கும் நிலைமை : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

Date:

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அநியாயமாக மாவின் விலையை அதிகரித்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

50 கிலோ கிராம் கோதுமை மாமூட்டை ஒன்றின் விலை 12,500 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் கோதுமை மாவின் விலை திடீரென 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று அவர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைக்கு வந்துள்ளனர்.

அதேவேளை ‘கோதுமை மாவின் திடீர் விலை அதிகரிப்பு மிகவும் அசாதாரணமானது, இந்த விடயங்களை ஆராய யாரும் இல்லை. இந்த நாட்டில் செயலூக்கமான அரசாங்கம் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது,’ என்று அவர் கூறினார்.

இதனால், பேக்கரி உரிமையாளர்களாகிய நாங்கள், எங்கள் பேக்கரி வியாபாரத்தை மூடுவதா அல்லது தின்பண்டங்களை விரிவுபடுத்துவதா என விவாதித்து வருகிறோம், என அவர் வேதனை தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...