‘போதிய உரங்கள் இல்லாவிடின் ரூ.3,400க்கு அரிசியை இறக்குமதி செய்து விற்க வேண்டும்: அகில

Date:

நாட்டில் 10,000 உரங்கள் வழங்காவிட்டால் அரிசியை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரூ.3,400க்கு விற்க வேண்டியிருக்கும் என உரம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

அதில் 40,000 மெட்ரிக் தொன் நெல் சாகுபடிக்கும் 20,000 மெட்ரிக் தொன் மற்ற பயிர்களுக்கும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நெல், மரக்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர் விதைகளுக்கான தேவை போதுமானதாக இல்லை என கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

விவசாயத் துறையில் விதைத் தட்டுப்பாடு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாய அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...