மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது: இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்!

Date:

மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பை துண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
“மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பை துண்டிக்கும் எண்ணம் எப்பொழுதும் எமக்கு இருந்ததில்லை. நாம் அனைவரும் வெளியேறினால் நிச்சயமாக மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் அத்தகைய செயலை நாம் செய்யப்போவதில்லை. ஏனெனில் இந்த நேரத்தில் மின்சாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் எவராலும் ஃபோன் ஒன்றை சார்ஜ் செய்யவோ, பேசவோ, எதையும் செய்யவோ முடியாது போகும். அதனால்தான், எக்காரணம் கொண்டும் மின்வெட்டை அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறுகிறோம்.”

Popular

More like this
Related

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...