மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம்: பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணை

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று (2) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில் சட்டத்தரணி நுவான் போபகே தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் இந்தக் குழுவினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தனர்.

அதற்கமைய குறித்த விசாரணை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மிரிஹான கலவரம் தொடர்பில் 54 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (3) மற்றுமொரு குழுவிற்கு அழைப்பாணை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்குழுவினரிடம் சம்பவம் தொடர்பிலும், சம்பந்தப்பட்ட நபர்கள், பஸ்களுக்கு தீ வைத்தவர்கள் தொடர்பாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...