மீளுருவாகிய கோட்டா கோ கம!

Date:

காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம மீள உருவாக்கப்பட்டு இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டம் தொடர்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்திருந்தது.
இந்த நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன், ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அலரிமாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மைனா கோ கம போராட்டக்களத்திற்குச் சென்ற முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக கூடாரங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அங்கிருந்து காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கமவிற்குச் சென்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள் அங்கு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதுடன், அங்கிருந்த கூடாரங்களையும் எரித்தனர். இதன்காரணமாக கோட்டா கோ கம போராட்டக் களம் கலவரபூமியாக மாறியது.
தாக்குதல்கள் எல்லை மீறிய பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கோட்டா கோ கம பகுதியில் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அமைதி போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களும் தம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் எதிர்த்தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அத்தோடு, குறிப்பிட்ட சிறிது நேரத்திலேயே கொழும்பு காலிமுகத்திடல் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.
இதனையடுத்து, ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றிருந்தது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 229 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் அழித்தொழிக்கப்பட்ட கூடாரங்கள் நேற்றையதினமே சிறிது சிறிதாக மீள உருவாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கோட்டாகம மீளுருவாக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

சுங்க வருவாய் ரூ. 2 டிரில்லியனைக் கடந்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க...

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...