லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பமாகவுள்ளது!

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சில தினங்களின் பின்னர் இன்று கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சமையல் எரிவாயு விநியோகிக்ப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மக்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.

நேற்றும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 35,000 மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவன அதிகாரிகளை இன்று அழைக்குமாறு கோப் குழுவின் தலைவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு விநியோகிப்பதற்கான லொறிகள் தாமதமாக வழங்கப்படுவது தொடர்பில் லிட்ரோ நிறுவன அதிகாரிகளிடம் வினவவே இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக...

இந்தோனேஷியக் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இருவர் உயிரிழப்பு!

கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் சனிக்கிழமை (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான...