‘வெசாக் தினத்தில், பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ரஞ்சன் ராமநாயக்க இல்லை’

Date:

(File Photo)

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 244 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இவர்கள் மத்தியில் விடுதலை செய்யப்படவில்லை.

வெசாக் தினத்தன்று கலைஞர்கள் உட்பட பலர் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதேவேளை அபராதம் செலுத்த தவறியமைக்காக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள், 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் தண்டனையை பாதியாக குறைத்து பாதிக்கு மேல் தண்டனை அனுபவித்த கைதிகளின் எஞ்சிய தண்டனையை ரத்து செய்தும், உயர் நீதிமன்றத்தால் 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை முடித்த கைதிகளின் எஞ்சிய தண்டனையை ரத்து செய்ததன் கீழ் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...