வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை (23) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேற்று இராஜினாமாச் செய்ததையடுத்து அந்தப்பதவி வெற்றிடத்துக்கு அருணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகாரச் சேவையின் உறுப்பினரான, வெளிவிவகாரச் செயலர் அருணி விஜேவர்தன, 34 வருடங்களாக வெளிவிவகாரச் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளார்
அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்,
அத்துடன் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.