ஹரின்-மனுஷ ஆகியோர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளும் கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அமைச்சரவை அமைச்சுக்களை பொறுப்பேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவை பதவிகளை ஏற்கும் தீர்மானம் தமது அரசியல் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் எனினும் அவர்கள் நாட்டின் வெற்றிக்காக பந்தயம் கட்டுவதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...