‘அனுபவம் வாய்ந்த, வேலை செய்யத் தெரிந்த ஒருவரை நியமிக்கவும்’:லிட்ரோ நிறுவனம்

Date:

லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு வெளியேறிய மூன்று தலைவர்களுமே பொறுப்பு என லிட்ரோ நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.

அதேநேரம், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம் தொடர்பான அறிவுள்ள ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருட ஆரம்பத்தில் பதவி விலகிய அனில் கொஸ்வத்த, தாம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திஷார ஜயசிங்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் குறுகிய கால ஆட்சியே தற்போதைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதிகாரிகள் இப்போது இடமாற்றத் தலைவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாரிய அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறிய கொலம்பெட்டிகே, இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்த லிட்ரோ தற்போது ரூ.10 மில்லியன் கடன் வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...