அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

Date:

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அந்த நோயாளர்களை கவனிக்க வந்தவர்தான் நிபுணத்துவ மருத்துவர் பிரதமர்.

ரணில் விக்கிரமசிங்கவை சபிக்காமல் அனைவரின் ஆசியும் கிடைத்தால்! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைப் பிரகடனம் இன்றும் பூரண உண்மையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் கொள்கைப் பிரகடனத்தை மக்கள் செவிமடுத்திருந்தால் இன்று நாடு இவ்வாறான அவலத்தை எதிர்நோக்கியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...