அமைச்சர் நிமல் சிறிபாலவை பதவியில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு!

Date:

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

இதனை எதிர்த்து இன்று முற்பகல் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக இந்த தீர்மானத்திற்கு தடை கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு தலைவருக்கோ,  பொதுச் செயலாளருக்கோ, மத்திய குழுவுக்கோ அதிகாரம் இல்லை என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...