ஆகஸ்ட், டிசம்பரில் பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும்: மாணவர்கள் வருகை பற்றி அறிக்கை கோருகிறார் கல்வி அமைச்சர்

Date:

ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலைக் கல்வியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் இவ்வாரம் பாடசாலை செயற்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர முடிந்தால் பாடசாலை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்தமை தொடர்பில் மாகாண மட்டத்தில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...