உணவு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, மாவனல்லையில் இலவச மரக்கன்றுகள், மரவள்ளித்தடிகள் வழங்கும் நிகழ்வு!

Date:

நாடு எதிர் நோக்கியுள்ள உணவுப் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஆரம்பித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக 5000 அடி மரவள்ளிக் கிழங்குத் தடிகள் மற்றும் சுமார் 10,000 (1000 பக்கற்றுகள்) மிளகாய், கத்தரிக் கன்றுகள் இலவசமாக வழங்கும் வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர கலந்து கொண்டார்.

மேலும் கிராம உத்தியோகத்தர், கமநல உத்தியோத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் மற்றும் மாவனல்லைப் பொலிஸ் சமூக பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு உதவி செய்த மற்றும் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை, இந்நிகழ்வில் 30 பலா மரக்கன்றுகளும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...