உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பு: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Date:

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு போகங்களிலும் நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20% த்தினாலும் அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6% த்தினாலும் அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...