‘உரம் வழங்குவதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’

Date:

எதிர்வரும் நெல் விதைப்பதற்கான பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார  நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே இவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முழு நெற்பயிர்க்கும் உரம் வழங்குவதற்கு 220 மில்லியன் டொலர்கள் செலவாகும் என அமைச்சின் செயலாளர்  தெரிவித்தார்.

ஏற்கனவே 110 மில்லியன் ரூபா பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயக பருவத்திற்கான முழுமையான உரத்தை வழங்க முடியும் என செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் மகா பருவத்தில் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கையை மேற்கொள்ள முடிந்தால் நாட்டின் 09 மாத நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று இயற்கை விவசாயம்.

இவ்வாறான செயற்பாடு பாரியளவில் மேற்கொள்ளப்படும் போது ஏற்படும் நிலைமைகள் குறித்து விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, உரம் இல்லாத போதிலும், பருவத்தில் நெற்செய்கை தொடர்கிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகளின்படி 75 வீதமான நெற்பயிர்கள் உழவு செய்யப்பட்டுள்ளன.

65 சதவீத விதைப்பு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்களுக்கு உரம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...