‘எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’: எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு நாட்டில் இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட முன்னுரிமையின் கீழ் வெளியிட  எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...