சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் : பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து நேற்றையதினம் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, ஊழியர் மட்ட உடன்படிக்கைகளை இறுதி செய்வதற்கு பணியாளர் குழுவொன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாட்டை எட்டியதன் பேரில் நிதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...