சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் : பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து நேற்றையதினம் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, ஊழியர் மட்ட உடன்படிக்கைகளை இறுதி செய்வதற்கு பணியாளர் குழுவொன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாட்டை எட்டியதன் பேரில் நிதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...