ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நெருக்கடி நிலை: மைத்திரி

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி – பிரதமர் இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வரவழைக்கும் போது பிரதமரும் அவ்வாறே செய்வார் எனவும் சிறிசேன தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் உலகமே நம்பும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...