தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் ஏழு நிறுவனங்கள்: வர்த்தமானி அறிவித்தல்

Date:

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தம்மிக்க பெரேராவின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை விவரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏழு துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அவரது அவருக்கு கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான திட்டங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட், டெக்னோ பார்க் டெவலப்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் மற்றும் தகவல் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தொழில்நுட்ப பூங்காக்கள் செயல்படும்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2022 ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...