திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்துகள் சேவை நிறுத்தம்: :தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Date:

தனியார் பேருந்துகளுக்கு போதியளவு டீசல் வழங்கப்படாததால், திங்கட்கிழமை (6) முதல் சேவையை நிறுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய சாதாரண தரப் பரீட்சை முடிந்தவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இன்று ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கையிலே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்ப பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும், முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாரம் பயணிகள் பேருந்துகளுக்கு டீசல் வழங்க அரசு முன்னுரிமை அளிக்காவிட்டால், திங்கட்கிழமை முதல் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் விநியோகிக்கப்படும் என தெரிவித்த போதிலும் அதற்கான உரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட நாள் கணக்கில் வரிசைகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...