நபிகள் நாயகம் விவகாரம்: போராட்டம் நடத்தும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை நாடு கடத்தும் குவைத் அரசு!

Date:

நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்தநாட்டுக்கு அனுப்பி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பின. இந்த மனுக்கு இந்திய தூதரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் நூபர் சர்மாவை கைது செய்யக்கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் வளைகுடா நாடுகளில் சில இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே குவைத் அரசு, நபிகள் நாயகம் விவகாரம் தொடர்பாக குவைத் நாட்டில் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

ஆனால், ஃபஹாஹீல் பகுதியில்  போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் குவைத் அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டது.

அந்த வகையில் 20-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குவைத் விதிகளின்படி தொழில், படிப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக அந்நாட்டுக்கு வருவோர் போராட்டம் நடத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...