நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்:கெமுனு விஜேரத்ன

Date:

தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 20,000 இலிருந்து 3000 ஆகக் குறைந்துள்ளதுடன், இலங்கைப் போக்குவரத்துச் சபையிடமிருந்து தனியார் பேருந்துகள் டீசலைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் பேருந்துகள் வழமையாக இயங்காது எனவும் கெமுனு உறுதியாகக் கூறினார்.

தனியார் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில் தாங்கிகளை நிரப்ப முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததை அடுத்து பஸ்கள் வழமையாக இயங்கும் என கெமுனு உறுதியளித்துள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் 24 மணி நேர எரிபொருள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை வழமைக்கு திரும்பினாலும், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...