பங்களாதேஷ் இலங்கை மக்களுக்காக முன்னெடுத்த வெற்றிகரமான வேலைத்திட்டம்!

Date:

இன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை மக்கள் மீது பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக சில முஸ்லிம் நாட்டினுடைய தூதரகங்கள் இந்த வகையில் செயற்பட்டு வருவதினை எம்மால் பார்க்கமுடியுமானதாக இருக்கின்றது.

அந்த வரிசையில் பங்களாதேசை மையமாகக் கொண்ட மருத்துவக்குழு இலங்கைக்கு வந்து மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

இன்று கோவத்த ஜூம்மா பள்ளிவாயலில் பங்களாதேஷ் அமைப்புகளான டாக்கா சமூக மருத்துவமனை அறக்கட்டளை நிறுவனம் (DCH Trust) மற்றும் சமூக முன்முயற்சி சங்கம் (CIS) என்ற இரு நிறுவனங்களும் இணைந்து மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இலங்கை எம் எப் சி டி (MFCD) அமைப்புடன் இணைந்து நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் காணப்படுகின்ற மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கான உளர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...