இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாட்டு நாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்திகளை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
அதன் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மற்ற வெளிநாட்டு நாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மொஹமட் நஷீட் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
வெளிநாட்டு நாடுகளை தொடர்பு கொள்ள நஷீட் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பேசிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பல நாடுகள் இலங்கைக்கு உதவ மறுத்துவிட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், இந்த விடயத்தில் இலங்கைக்கு உறுதியான திட்டம் உள்ளதா? என்றும், இலங்கை தனது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான உறுதியான திட்டத்தை உருவாக்கும் வரை இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளர் ஷேக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் இலங்கைக்கு விற்கப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை அனுப்பினால் அது குறித்து பரிசீலிப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட், இது தொடர்பான அறிக்கைகள் தவறானவை என்று கூறினார்.
மேலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான உதவிகள் கிடைக்கும் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.