பாதாள குழுவொன்றுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

Date:

களனி பட்டிய சந்தியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மினுவாங்கொடையைச் சேர்ந்த 32 வயதுடைய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் தமது மனைவி மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் 2 வயது குழந்தையும், அந்த வீதியூடாக பயணித்த மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 2 வயது குழந்தை பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, பாதாள குழுவொன்றுடன் தொடர்பிணை பேணியிருந்த நிலையில், அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நீண்ட காலமாக இரண்டு பாதாள குழுக்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகளே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...