புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்!

Date:

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில் தனியார் பஸ் சேவைகள் குறைந்தபட்சமாகவே இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளும் சுமார் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் வாகன கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...