புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்!

Date:

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில் தனியார் பஸ் சேவைகள் குறைந்தபட்சமாகவே இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளும் சுமார் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் வாகன கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...