புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்!

Date:

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில் தனியார் பஸ் சேவைகள் குறைந்தபட்சமாகவே இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளும் சுமார் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் வாகன கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...