போதைப் பொருள் பாவனை தொடர்பில் குத்பா வை அமைத்துக் கொள்ளுமாறு உலமா சபை வழிகாட்டல்!

Date:

போதைப் பொருள் பாவனை காரணமாக நம்நாட்டு மக்கள் பல நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சீரழிவுகளுக்கும் நாளுக்கு நாள் முகங்கொடுத்து வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் போதைப் பொருட்களிலிருந்து சிறார்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குடும்பங்கள், சமூகம், தேசம் என அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அண்மையில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான ஒருவர் ஒரு சிறுமியை கொலை செய்த செய்தி நம்அனைவரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது.

இஸ்லாம் போதைப் பொருள் பாவனையை தடைசெய்துள்ளதுடன் இதற்கு எதிராக செயற்படுவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்றும் போதித்துள்ளது.

ஆகவே, போதைப் பொருள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதையும் இதனால் மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களையும் தெளிவுபடுத்தி எதிர்வரும் குத்பாக்களை அமைத்துக் கொள்ளுமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அஷ்ஷேக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்

அஷ்ஷேக் எம். அப்துல் முக்ஸித்
செயலாளர் – பிரச்சாரக் குழு

Popular

More like this
Related

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...