போராட்டம் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக்கு இடையூறு!

Date:

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் மறித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி செயலகத்துக்கான மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்து மாடிகளை அமைத்தனர்.

இதன்படி ஜனாதிபதி செயலகத்துக்கான அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அலுவலகங்களுக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியாத நிலை உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி அமைச்சின் கதவுகள் முற்றுகையிடப்பட்டமையினால் நிதி அமைச்சின் செயலாளர் சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர்களுடன் நடாத்தவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸ் லொறியில் ஏற்றி பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவர்களில் ஒரு பிக்கு நான்கு பெண்கள் மற்றும் 16 ஆண்கள் உள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள வீதியில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இதேவேளை சமூக ஆர்வலர் அனுருத்த பண்டாரவும் சம்பவ இடத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டமை அவரது முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...