மகளிர் விவகார அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி?

Date:

பெண்கள் விவகாரம், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சகம் இன்று ஜூன் 10 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவருக்க புதிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...