‘ரயில் கட்டணத்தை உயர்த்த அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’

Date:

அரசாங்கம் கொள்கை முடிவொன்றை எடுத்து ரயில் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறுகையில்,
அலுவலக ஊழியர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தற்போதுள்ள ரயில்களில் இன்று முதல் பல புதிய ரயில்கள் சேர்க்கப்படும்.

மேலும், எதிர்காலத்தில் புதிய ரயில்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

‘தற்போது ரயில்வேயில் பேருந்துக் கட்டணத்தில் 20 முதல் 24வீத மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதனால், டீசல் விலை உயர்வால் எங்களது செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆனால், வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இல்லை. பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்துகின்றனர். குறைந்தபட்ச செலவு, என்று அவர் கூறினார்.

எனவே, எதிர்காலத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்து ரயில் கட்டணத்தை அதிகரிக்க திணைக்களத்திற்கு அனுமதியளிக்கும் என நம்புவதாக  தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...