வடக்கு, கிழக்கில் முதலாவது கணணி விஞ்ஞான துறையின் பேராசிரியர் எச்.எம்.எம்.நளீர்!

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் மே மாதம் 28ஆம் திகதி முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணணி விஞ்ஞான (Computer Science) பிரிவுக்கு கணணி விஞ்ஞான பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, 18.12.2020 முதல் செயற்படும் விதத்தில் கணணி விஞ்ஞான துறையில் பேராசிரியராக பல்கலை கழக பேரவையின் 258ஆவது அமர்வில் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கணணி விஞ்ஞான துறையில் முதலாவது பேராசிரியர் என்ற வரலாற்று இடத்தை கலாநிதி நளீர் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1996 முதல் 1998 வரை உதவி விரிவுரையாளராக இணைந்து கொண்ட கலாநிதி நளீர், பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 1998 ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

இதேவேளை கணணி விஞ்ஞான துறைக்கு 2015-2017 வரை இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தற்போது கணணி விஞ்ஞான துறையின் திணைக்களத் தலைவராக பணியாற்றும் நளீர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாகம் சார்ந்த பிரிவுகளிலும் பணியாற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் நற்பட்டிமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹும்களான முன்னாள் அதிபர் அல் ஹாஜ் சுலைமாலெப்பை ஹச்சு முகம்மட் மற்றும் முன்னாள் ஆசிரியை ஹஜியாணி சின்னலெப்பை மீரா உம்மா ஆகியோரின் ஐந்து பிள்ளைகளில், ஐந்தாவதாகப் பிறந்த கலாநிதி நளீர் , தனது பாடசாலைக் கல்வியை ஆரம்பம் முதல் இறுதிவரை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கற்றிருந்தார்.

பல்கலைக்கழகக் கல்வியை இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இணைந்து 1996 இல் தனது (B.Sc.(Hons)) பட்டத்தைப் பெற்றார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டில் PGIS இல் இணைந்து M.Sc. in Applied Statistic ஐயும், 2009 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் இணைந்து MPhil in Computer Science பட்டத்தையும், 2013 ஆம் ஆண்டு சீனாவின் Beijing Institute of Technology இல் இணைந்து தனது Ph.D. பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை ஐம்பதுக்கு மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள நளீர், 2011,2012 ஆண்டுகளில் கணணி விஞ்ஞான துறையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சர்வதேச விருதுகளையும் பெற்றிருந்தார்.

இவர் மக்கள் நலத்திட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி செயற்படும் சிறந்த சமூக சேவகருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்- நூருல் ஹுதா உமர்

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...