வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை!

Date:

அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

அடுத்த வாரத்தில் இந்து இதனை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்கள் நட்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீடுகளில் அவர்கள் உபயோகமுள்ள முறையில் பயிர்செய்கையை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விடுமுறையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், உரப்பிரச்சினை இன்று நாட்டில் நிலவுகின்றது.

எனினும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...