வேலையற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சி: அமைச்சர் மனுஷ

Date:

உலகளாவிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கை தொழிலாளர்களின்  பிள்ளைகளுக்கு இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இன்று (20) காலை அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் உள்ள ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சிகளை வழங்குவதற்கான செலவை ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தினால் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘ஷ்ரம வாசனா’ நிதியத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் உழைக்கும் மக்களின் நலன் குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார விசேட கவனம் செலுத்தினார்.

இதேவேளை, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சின் தலையீட்டுடன் சுதந்திர வர்த்தக வலயங்களை மையமாகக் கொண்டு தொடர் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...