அனுராதபுரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!

Date:

இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர் பல நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்டதாகவும், அண்மைய வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதன்படி கொஹுவல சந்தியில் இருந்து களுபோவில சந்தி வரையிலான ஒரு பாதை மூடப்பட்டது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...