அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேட்சையாக செயற்பட தீர்மானிக்கவில்லை: சம்பிக்க

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதாக விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை எனவும் கொள்கையொன்றின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அடிப்படையில் அரசாங்கம் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...