அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேட்சையாக செயற்பட தீர்மானிக்கவில்லை: சம்பிக்க

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதாக விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் தாம் யாருடனும் கோபம் கொள்ளவில்லை எனவும் கொள்கையொன்றின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அடிப்படையில் அரசாங்கம் மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...